காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வீடு முற்றாக சேதம்

ByEditor 2

Feb 9, 2025

இரவு கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் பல தென்னை மரங்களையும், வாழை,முதலான பயிர்களையும் துவம்சம் செய்து உள்ளதோடு, ஒர் ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண்மைகளையும் துவம்சம் செய்துள்ளது என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் திருகோணமலை மாவட்ட, கிண்ணிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வெல்லாங்குளம் ,மஜீத் நகர் முதலான பகுதிகளில்  நேற்று (08)  இரவு இடம் பெற்றுள்ளது.

மனிதன் யானை மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும் அவற்றையும் மீறி சில அசம்பாவிதங்கள் நடைபெறாமலும் இல்லை.
அந்த வகையில்,கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாங்குளம் பகுதிக்குள் இரவு நுழைந்த காட்டு யானைகள்  தென்னை, கத்தரி முதலான பயிர்களையும் வேளாண்மைகளையும் நாசமாக்கி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.வீடொன்ரையும் துவம்சம் செய்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இதேவேளை பல தென்னை மரங்களையும்,வேளாண்மையும் நாசமாக்கி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

யானையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு ஏக்கர் வயல் நிலங்களை நாசமாக்கி விட்டது
இந்தப் பகுதிகளில் யானைகளின் தொல்லை அதிகமாக இருக்கின்றது இது எங்களுடைய வாழ்வாதாரம் தென்னை, முதலானவற்றையும்  அழித்து விடுகின்றன.

ஒவ்வொரு இரவும் வந்து இவ்வாறான நாசத்தை செய்கின்றது. இரவு நேரங்களில் எங்களுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்தால் வெளியில் செல்ல முடியாது  இதற்கு அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

அதிகாரிகளுக்கு அறிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
தென்னை மரம் முதலானவத்தையும் முறித்துள்ளது. இரவு நேரங்களில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது சின்னக் குழந்தைகளை வைத்துக் கொண்டிருக்கின்றோம். அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும். சரியான முடிவு பெற்றுத் தர வேண்டும்.

இரவு வந்த யானைகள் தென்னை மரம் மரங்களை வேளாண்மையை  அழித்துவிட்டது. நாங்கள் பெரும் துன்பத்துக்கு மத்தியில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் இதுக்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள்  மேலும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *