தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

ByEditor 2

Feb 9, 2025

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று  இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து  கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு மீன்பிடி விசைப்படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்து இரணைத்தீவு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணை முடித்துக் கொண்டு மீனவர்கள் 14 பேரும் விசைப்படகுடன் கிளிநொச்சி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *