வௌிநாட்டு பிரஜை நீரில் மூழ்கி உயிரிழப்பு

ByEditor 2

Feb 7, 2025

பெந்தொட்ட பகுதியில் கடலுக்கு நீராடச் சென்ற வௌிநாட்டு பிரஜையொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பெந்தொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் பிரதேச மக்கள் குறித்த நபரின் சடலத்தை பலபிட்டிய மருத்துவமனையில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் 63 வயதுடைய கசகஸ்தான் நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பெந்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *