கொள்கலன்களில் இருந்தது என்ன?

ByEditor 2

Jan 30, 2025

சுங்க ஆய்வு இல்லாமல் 323 இறக்குமதி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை தெளிவுபடுத்தி, இலங்கை சுங்கத்துறை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

8 அம்சங்களை உள்ளடக்கியதாக வௌியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில், பொருட்களை விடுவிப்பதற்கு இலங்கை சுங்கம் பின்பற்றும் வழிமுறை மற்றும் ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதத்திற்கு வழிவகுத்த காரணிகள் ஆகியவை தௌிவுபடுத்தப்பட்டுள்ளன.

மேற்கூறிய கொள்கலன்களில் எஸ்போ லங்கா என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட எந்த கொள்கலன்களும் இல்லை என்றும், ஆயுதங்கள், தங்கம் மற்றும் போதைப்பொருள் போன்ற பொருட்கள் அதில் இல்லை என்றும் இலங்கை சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *