விகாரையில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டுகள்

ByEditor 2

Jan 28, 2025

பெலியத்த பொலிஸ் பிரிவின் பட்டியவெல நிஹலுவ பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றின் நிலப்பகுதி ஒன்றில் இருந்து துருப்பிடித்த இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெலியத்த பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (27) மாலை இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

நிஹலுவ பகுதியில் உள்ள விகாரையின் நிலப்பகுதி ஒன்றில் கிணறு அமைந்துள்ள பகுதியை சுத்திகரிக்க உழவு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட போது வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்டுள்ளது.

அதன்படி, அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது வெடிக்காத மற்றும் துருப்பிடித்த இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெலியத்த பொலிஸார் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் இந்த விடயத்தைப் பதிவு செய்து, இரண்டு கைக்குண்டுகளையும் செயலிழக்கச் செய்ய விசேட அதிரடிப் படை அதிகாரிகளை அழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *