சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ByEditor 2

Jan 22, 2025

 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பனிமூட்டமான நிலை காணப்படுவதாகவும், எனவே சாரதிகளுக்கு எச்சரிக்கை செயல்படுமாரு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் 

அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே குறித்த பிரதேசங்களுக்கு செல்லும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *