மண்சரிவு எச்சரிக்கை

ByEditor 2

Jan 20, 2025

பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (20) மாலை 4:00 மணி முதல் நாளை (21) மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை, வில்கமுவ, யடவத்தை மற்றும் உக்குவெல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்காக 2ஆம் நிலை  செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதுளை மாவட்டத்தின் பசறை, பதுளை, ஹாலிஎல, கண்டி மாவட்டத்தின் பாததும்பர, பன்வில, மெததும்பர, குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம, மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம, அம்பன்கங்கை கோரளை, நாவுல, பல்லேபொல மற்றும் மாத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் நிலை மஞ்சல் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *