போதைப்பொருளுடன் இருவர் கைது

ByEditor 2

Jan 20, 2025

6 கிலோ 630 கிராம்  “குஷ்” போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு விமானப் பயணிகள், விமான நிலையத்தில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு சந்தேகநபர்களும் இன்று (20) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட “குஷ்” போதைப்பொருளின் பெறுமதி 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட முதல் பயணி ஹம்பாந்தோட்டை கட்டுவான பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஆவார்.

அவர் தற்போது கொஸ்கமவில் உள்ள சாலாவ இராணுவ முகாமில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்றைய 30 வயதான பெண், காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அம்பாறை, மஹாஓயாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அவர் இன்று தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *