மர்மமான முறையில் நபரொருவர் உயிரிழப்பு

ByEditor 2

Jan 20, 2025
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

எஹலியகொட – தொரணகொட பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றின் குளியலறையில் மர்மமான முறையில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (19) எஹலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்தில் பத்பேரிய, பரகடுவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது நீதவான் விசாரணைகளுக்காக அவிசாவளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *