நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம்

ByEditor 2

Jan 17, 2025

பெண் நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட நாடாளுமன்ற தகவல் தொடர்புத் துறை, பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த (09) பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவின் பரிந்துரையின் பேரில் குறித்த மூன்று ஊழியர்களையும் பணி நீக்கம் செய்வதற்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன அனுமதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *