கரையொதுங்கிய அரியவகை மீன்

ByEditor 2

Jan 16, 2025

அம்பாறை மாவட்ட மருதமுனை கடற்கரையில் டொல்பின் மீன் ஒன்று இன்றையதினம் (16-01-2025) மாலை கரையொதுங்கியுள்ளது.

கரையொதுங்கிய டொல்பின் மீனை அப்பகுதி சிறுவர்கள் பிடித்து மீண்டும் கடலில் விடுவதை காண முடிந்ததாக உள்ளது.

குறித்த மீன் சுமார் 4 முதல் 5 அடி வரையான நீளம் கொண்டதுடன் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பினால் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும், குறித்த மீனை காண்பதற்கு அப்பகுதி மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *