சீனா – இலங்கை இடையே ஒப்பந்தம்

ByEditor 2

Jan 16, 2025

சமத்துவம், பரஸ்பர நன்மை மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் விளைவுகள் ஆகிய கொள்கைகளின்படி இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து நிறைவுசெய்ய இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் சீன விஜயம் தொடர்பாக இன்று (16) வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தில் இரு நாடுகளும் திருப்தி அடைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சீன இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் தொடர்புடைய சங்கங்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதில் தேயிலை, இரத்தினக்கல் மற்றும் பிற தொழில்களில் இலங்கை நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி, சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கண்காட்சி, சீன-தெற்காசிய கண்காட்சி மற்றும் மின் வணிக தளங்கள் போன்ற கண்காட்சிகளில் இலங்கை பங்கேற்பதை எளிதாக்கவும், பரஸ்பர நன்மை பயக்கும் அடிப்படையில் இரு நாடுகளின் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும் சீனா தயாராக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *