மதுபோதையில் ஒருவர் அடித்து கொலை

ByEditor 2

Jan 16, 2025

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரமெட்டிய பிரதேசத்தில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளதுடன் கொலை செய்யப்பட்டவர் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடையவர் ஆவார்.

மதுபானம் அருந்திக்கொண்டிருந்தபோது தகராறு

கொலை செய்யப்பட்டவர் சில நபர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திக்கொண்டிருந்தபோது, கொலை செய்யப்பட்டவருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது சந்தேக நபர்கள் உயிரிழந்தவரை காயப்படுத்தியதை அடுத்து காயமடைந்தவர் ஹம்பேகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *