பங்குச் சந்தையில் வளர்ச்சி!

ByEditor 2

Jan 15, 2025

கொழும்பு பங்குச் சந்தையில் இன்று (15) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி, இன்றைய வர்த்தக நாள் நிறைவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 226.35 புள்ளிகள் அதிகரித்து 16,152.35 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண் 97.63 புள்ளிகள் அதிகரித்து 4,905.92 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது.

 மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 4.44  பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், ஜனவரி 2 ஆம் திகதி கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் முறையாக 16,000 புள்ளிகளை கடந்த போதும், அதன் பின்னர் மீண்டும் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் சரிவை சந்தித்த காரணத்தினால்  முதலீட்டாளர்கள் சற்று தயக்கம் காட்டினர்.

எவ்வாறாயினும், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று மீண்டும் 16,000 புள்ளிகளைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *