கரையொதுங்கிய மிதவைப்படகு

ByEditor 2

Jan 15, 2025

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த மிதவை படகானது நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் இன்றைய தினம் (15)கரையொதுங்கியுள்ளது.

மிதவை படகில் புத்த சம்ய அடையாளங்கள் காணப்படுவதால் மியான்மார் நாட்டு பகுதியில் இருந்து குறித்த மிதவை வந்திருக்கலாம் என மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரதேசவாசிகள் மிதவை படகை சென்று ஆவலுடன் பார்வையிடுவதாக கூறப்படுகின்றது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *