ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றிற்கு

ByEditor 2

Jan 9, 2025

2025 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

இரண்டாவது வாசிப்பு எனப்படும் பாதீட்டு உரை எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *