முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் விற்பனை

ByEditor 2

Jan 8, 2025

  மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 60 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *