சுகயீனமடைந்திருக்கும் காட்டு யானை!

ByEditor 2

Jan 7, 2025

10 நாட்களுக்கு மேலாக காட்டு யானை ஒன்று கால் வீங்கிய நிலையில் மிகவும் துன்பப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி இரணைமடுக் குளத்திற்கு உள்ளும் குளக்கட்டிக்கு கீழாகவும் குறித்த காட்டு யானை கால் வீங்கிய நிலையில் மிகவும் துன்பப்பட்டு வருகின்றது.

இதுவரை வனஜீவராசிகள் திணைக்களமோ, அது சம்பந்தப்பட்ட திணைக்களங்களோ எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இந்த யானையை வேதனையுடன் அலைந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த யானைக்கு உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த யானைக்கு நேற்று முதல் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *