சிக்கிய போலி மருத்துவர்!

ByEditor 2

Jan 6, 2025

குருணாகல் போதனா வைத்தியசாலைக்குள் ஸ்டெதஸ்கோப்புடன் நுழைய முற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் குருணாகல், பொத்துஹெர, ஹந்துகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் என கூறப்படுகின்றது.

அதோடு சந்தேக நபரிடம் இருந்து களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தின் வைத்திய அடையாள அட்டை மற்றும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *