கொழும்பு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய,தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கும் இலவச புள்ளிகள் வழங்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய அண்மையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி.அமித் ஜயசுந்தர நேற்று புதன்கிழமை (1) மாலை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசியப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
