யாழில் மாணவி ஒருவர் உயிரிழப்பு

ByEditor 2

Jan 1, 2025

யாழ்ப்பாணத்தில் உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற மாணவி ஒருவர் இம்முறை இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் தோற்றியிருந்தார்.

இவ்வாறான நிலையில், குறித்த மாணவி (30-12-2024) பரீட்சைக்கு தோற்றி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனையடுத்து, பரீட்சை திருப்திகரமாக இல்லை என தாய், தந்தையருக்கு கூறி கவலையடைந்துள்ளார்.

பின்னர் அவரது தந்தை கடமை நிமிர்த்தம் வெளியே சென்றவேளை, குறித்த மாணவி வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 7ஏ 2பி சித்திகளை பெற்றவர் எனவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயவாலசிங்கம் மேற்கொண்டடுள்ளர்.

இதனைடுத்து, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *