இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (30) ஊவா மாகாணத்தை மையமாக கொண்டு பொதுமக்களின் ஆலோசனைகளை பெறவுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான 6 மாத காலப்பகுதிக்கான மின்சார கட்டண திருத்த யோசனைக்கான பொதுமக்கள் கருத்து கோரல் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி, மின்சார நுகர்வோர் உட்பட மின்சாரத் துறையில் உள்ள அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை சமர்ப்பிப்பதற்கு வசதியாக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கி பொதுமக்கள் கருத்து கோரல் நடத்தப்படுகிறது.