மரக்கறி விலை உயர்வு

ByEditor 2

Dec 29, 2024

பல பிரதேசங்களின் பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த வாரத்தை விட மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (29) ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 350 முதல் 400 ரூபா வரையிலும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 800 முதல் 900 ரூபா வரையிலும் விலை அதிகரித்துள்ளது.

இது தவிர கெரட், வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட பல வகையான மரக்கறிகளின் விலையும் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளன.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், மலையகம் மற்றும் ஏனைய பகுதிகளிலும் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, 160 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வட்டக்காய் விலை, தற்போது 300 – 400 ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஏனைய அனைத்து காய்கறி வகைகளின் விலையும் தற்போது 500-800 ரூபாவுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.\

ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1400 ரூபாவுக்கும், கறி மிளகாய் கிலோ 1500 ரூபாவுக்கும், தக்காளி கிலோ 600-800 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் மரக்கறி விற்பனையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு வருடமும் நத்தார் பண்டிகை நிறைவு பெறும் போது காய்கறிகளின் விலை அதிகரிக்கும், ஆனால் அடுத்த ஆண்டு முதல் சில வாரங்களில் தேவைக்கேற்ப காய்கறிகள் கிடைக்கும் போது விலை குறைவடையும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *