கொக்கேய்னுடன் இலங்கைக்கு வந்த பெண் கைது

ByEditor 2

Dec 29, 2024

கொக்கேய்னுடன் இலங்கைக்கு வந்த பெண் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று  கைது செய்துள்ளது.

குறித்த பெண் கானாவில் இருந்து வந்தவர் எனவும், அவர் தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் இன்று (29) அதிகாலை 1.50 மணியளவில் கட்டார் எயார்வைஸ் விமானத்தில்​ நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

41 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண்ணிடமிருந்து சுமார் 4,068 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதன் பெறுமதி 142 மில்லியன் ரூபா என சுங்க பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *