காலி, தொடந்துவ மொரகொல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இன்று (28) இடம்பெற்ற பெரஹெரா ஊர்வலத்தின் போது யானை ஒன்று குழப்பம் விளைவித்து ஒருவரை தாக்கியுள்ளது.
ஊர்வலத்தில் சென்ற நபரை யானை தாக்கிய நிலையில் படுகாயமடைந்த நபர் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.