கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார், அவருக்கு வயது 91.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத்திணறல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார்.
அனைவராலும் கொண்டாடப்படும் எழுத்தாளராக மட்டுமல்லாமல், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
மலையாள எழுத்துலகில் முன்னோடியாகக் கருதப்படும் வாசுதேவன் நாயரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.