அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான லொறி

ByEditor 2

Dec 25, 2024

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த லொறி ஒன்று கஹதுடுவ நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தை அடுத்து குறித்த லொறி சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

லொறி சரிவில் கவிழ்ந்த போது 50 கிலோ எடையுள்ள 600 டொலமைட் மூடைகள் இருந்ததாகவும், விபத்தின் போது லொறி 3 தடவைகள் உருண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் லொறியின் சாரதிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மாத்தளை பிரதேசத்தில் இருந்து எல்பிட்டிய பகுதிக்கு டொலமைட் தொகை கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக லொறி சாரதியிடம் விசாரணை நடத்திய போது, ​​மூன்று நாட்களாக சரியாக தூங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *