546 இந்திய மீனவர்கள் கைது!

Byadmin

Dec 24, 2024

மன்னாருக்கு வடக்கே கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இரண்டு இந்திய மீன்பிடி படகுகளை கைப்பற்றியதுடன் 17 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள் தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 546 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 72 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *