அனைத்து மாணவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்

ByEditor 2

Dec 23, 2024

பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றதென ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு தேவையுடையோரின் பிள்ளைகளுக்கும் 6,000 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதை விட, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டும் என அந்த சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

அதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாணவர் தொகைக்கேற்ப வரி குறைக்கப்பட்டு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டதொரு குழுவிற்கு மாத்திரம் 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவது பாரிய பிரச்சினையாகும் என்றும் கூறியுள்ளார்

இந்த சலுகைகள் அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *