கொலன்னாவையில் தாழ்நில வெள்ளப்பெருக்குக்கான தீர்வு

ByEditor 2

Dec 21, 2024

கொலன்னாவ பிரதேசத்தில் நிலவி வரும் தாழ்நில வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உட்பட மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம், பிரதேச செயலகம் மற்றும் ஏனைய தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து கொலன்னாவ பிரதேசத்தில் திட்டமிடப்பட்டுள்ள கால்வாய் சுத்திகரிப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

கலந்துரையாடலின் போது திட்டத்தின் செயல்திறனை மதிப்பிடுவது மற்றும் பிரதேசத்தில் நீண்ட கால வெள்ளத் தணிப்பு உத்திகளுடன் அதன் சீரமைப்பை உறுதி செய்வது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *