அரசாங்கம் முஸ்லிம்களை ஒருபோதும் புறக்கணிக்காது

Byadmin

Dec 20, 2024

சமூகத்தை பாதிக்கும் தீர்மானங்களை எதிர்க்க தயங்கமாட்டோம் என்கிறார் பிரதியமைச்சர் முனீர் முளப்பர்.

பிரதியமைச்சர் முனீர் முளப்பர் 2021-.09.-13 அன்று தனியார் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞான­சார தேரர், உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி “அல்லாஹ்” என்ற ஒரு கருத்தை தெரி­வித்தார். மறுநாள் பாரா­ளு­மன்றம் முதல் பத்­தி­ரி­கைகள் வரை அனைத்­திலும் இதுதான் தலைப்புச் செய்தி. அந்த சந்­தர்ப்­பத்தில் இந்த கருத்து போலி­யா­னது என்­பதை நிரூ­பித்து இஸ்லாம் மற்றும் தீவி­ர­வாதம் பற்றி சிங்­கள மொழியில் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­கான கட்­டாய தேவை ஊட­வி­ய­லா­ளர்களாகிய எமக்கு ஏற்­பட்­டது. அதற்­காக நாங்கள் அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா முதல் முஸ்லிம் தலை­வர்கள் பல­ரு­டனும் உரையாடினோம். இறு­தியில் ஞான­சார தேரரின் இந்த கருத்­துக்கு சிங்களத்தில் தெளி­வாக பதில் வழங்கக்கூடிய ஒரு மௌல­வியை சந்­தித்தோம். அன்று, இஸ்­லா­மிய வெறுப்பும் இன­வா­தமும் தலைக்கு மேல் ஆடிக் கொண்­டி­ருந்த நேரத்தில் தைரி­ய­மாக முன்வந்து ஞான­சார தேரரின் கருத்­துக்கள் அத்­த­னையும் பொய் என்­பதை நிரூ­பித்தவர்தான் மௌலவி தான் முனீர் முளப்பர். இன்று அவர் தேசிய ஒரு­மைப்­பாட்டு பிரதி அமைச்சர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *