கொவிட் ரேபிட் ஆன்டிஜென் இறக்குமதியின் நடந்த மோசடிகள்

Byadmin

Dec 19, 2024

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது ரேபிட் ஆன்டிஜென் கருவிகளை கொள்வனவு செய்த போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (18) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

எதிர்காலத்தில் இந்த மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.ரேபிட் ஆன்டிஜென் கருவிகளை கொள்வனவு செய்வதற்கு அதிக தொகை செலவிடப்பட்டது தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையில் பதிவு செய்யப்படாத நிறுவனம் எனவும், அந்த நிறுவனத்திடம் இருந்து இரண்டு மில்லியன் ஆன்டிஜென் கருவிகளை கொள்வனவு செய்வதற்கு 2.2 பில்லியன் ரூபா பொது பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கேட்ட வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொற்றுநோய் காலத்தில், கொவிட் தடுப்பூசிகள் மற்றும் ஆன்டிஜென் கருவிகளை வாங்குவதற்கு சுமார் 3.2 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டன. இதில் 2.2 பில்லியன் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனத்திற்காக செலவிடப்பட்டது.

PCR கருவிகளுக்காகவும் 3.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. PCR கருவிகள் மற்றும் விரைவான ஆன்டிஜென் கருவிகளுக்காக அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை 6422 மில்லியன் ரூபாவாகும். தோராயமாக 6.4 பில்லியன்.

சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவிக்கையில்;

“இந்த கொள்வனவில் எந்தெந்த நிறுவனங்கள் என்எம்ஆர்ஏவில் பதிவு செய்யப்பட்டுள்ளன? இங்கு 26 நிறுவனங்கள் உள்ளன. இந்த 26 நிறுவனங்களில் 07 நிறுவனங்களிடம் இருந்து PCR மற்றும் ஆன்டிஜென் வாங்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் ஸ்டீவர்ட் ரேபிட் ஆன்டிஜென் மற்றும் பிசிஆர் ஆகியவற்றை வழங்கியுள்ளார். எவ்வாறாயினும், இந்த ரேபிட் ஆன்டிஜென் வழங்குவதற்கு 2 மில்லியன் ரூபாவை வழங்கி 2200 மில்லியன் ரூபாவை செலவிட்ட Divasa Pharma Colombo என்ற நிறுவனம் NMRA பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அல்ல.”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *