ரோயல் பார்க் கொலை வழக்கு விசாரணைக்கு

Byadmin

Dec 19, 2024

ராஜகிரிய ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஜூட் ஜூட் ஷமந்த ஜயமஹவின் இருப்பிடத்தைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (19) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய விதம் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும், அதனடிப்படையில் குறித்த பொதுமன்னிப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் பெண்கள் ஊடகவியலாளர் ஒன்றியம் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் பின்னர், இந்த குற்றவாளியை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதன்படி, இந்த மனு இன்று ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் எங்குள்ளனர் என்பதை கண்டறிய சர்வதேச பொலிஸாரின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவரின் வங்கிக் கணக்குகள் செயல்படுவது தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என்று அரசு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த உண்மைகள் குறித்து நீதிமன்றத்திற்கு பிரேரணை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்பிறகு, சம்பந்தப்பட்ட மனுவை மார்ச் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மூன்று பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை தெரிவிக்குமாறு அரசு சட்டத்தரணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *