அதிக ஒலி எழுப்பலை தடுக்கும் பலகைகள்

ByEditor 2

Dec 18, 2024
Emotional Asian Woman Covering Ears With Hands At Home, Annoyed Millennial Korean Lady Suffering Stress Or Headache, Can Not Bear Sound, Feeling Desperate And Having Nervous Breakdown, Closeup Shot

ஹிக்கடுவையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதித்த நீண்ட தூர சேவை பஸ்கள் அதிக ஒலி எழுப்பி பயணிப்பது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நகரின் வழியாக செல்லக்கூடிய வேகத்தடை மணிக்கு 40 கி.மீ ஆக உயர்த்தப்பட்டு, அதிக ஒலி எழுப்பலை தடுக்கும் பலகைகள் பொருத்தப்பட்டு, அது குறித்து பேருந்து ஓட்டுநர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர ஹிக்கடுவ பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த தீர்மானங்களை எட்டியுள்ளார்.

ஹிக்கடுவை சுற்றுலா நகரம் என்பதற்கான அடையாளங்களை சிங்கள மொழியிலும் தயார் செய்யுமாறு தென் மாகாண ஆளுநர் போக்குவரத்து பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ருஹுனு சுற்றுலா பணியகம் ஆகியவற்றுக்கு பணிப்புரை வழங்கியதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஹிக்கடுவ பிரதேசத்தில் கழிவு முகாமைத்துவத்தை முறையாக பேணுவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *