சபாநாயகர் பதவிக்கு பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை இன்னும் சில நாட்களில் எட்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சபாநாயகர் பதவிக்கு திரு.நிஹால் கலப்பட்டியின் பெயர் முன்மொழியப்பட்டது.