சதொச ஊடாக மூன்று தேங்காய்கள் மற்றும் 5 கிலோ அரிசி

ByEditor 2

Dec 5, 2024

சதொச ஊடாக 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் தேங்காய் மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அரிசி இன்று (05) சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக லங்கா சதொச தலைவர் சமித்த பெரேரா தெரிவித்தார்.

ஒருவருக்கு 3 தேங்காய்கள் மற்றும் 5 கிலோ அரிசி ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று முதல் கொழும்பை சுற்றியுள்ள சதொச கிளைகளிலும், நாளை (06) முதல் கொழும்பிற்கு வெளியே உள்ள சதொச கிளைகளிலும் தேங்காய் மற்றும் அரிசியை கொள்வனவு செய்ய முடியும்.

“தற்போது கொழும்பை சுற்றியுள்ள சதொச கிளைகளுக்கு தேங்காய் அனுப்பப்படுகிறது. மாலையில் கொழும்பில் உள்ள ஏனைய கிளைகளுக்கு வழங்கப்படும். மதியம் இந்த கிளைகளுக்கு நாட்டு அரிசி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *