ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.7,130 ஆகவும் சவரன், ரூ.57,040 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, 7,131 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 8 அதிகரித்து, 57,041 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் 55 ஆயிரத்திற்கும் குறைவாக விற்கப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது அதைவிட அதிகரித்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
ஆனால் வெள்ளியின் விலையில் எந்தவொரு மாற்றம் இல்லாமல் இருக்கின்றது. கிராமுக்கு ரூ.99.50 ஆகவும், கிலோவிற்கு ரூ.99,500 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.