பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் ஜோடியாக வெளியேறப்போகும் போட்டியாளர்கள் யார்?

ByEditor 2

Nov 30, 2024

பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் செய்யப்பட உள்ளனர். இந்த விடயம் தொடர்பில் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

டபுள் எவிக்‌ஷன் 

பிக் பாஸ் வீட்டிற்குள் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். இதில் நான்கு பேர் வெளியேறிச்சென்றுள்ளனர். இதன் பின்னர் 6 பேர் வைல்டு கார்டு என்றியாக பிக் பாஸ் வீட்டில் நுழைந்தனர்.

கடந்த அக்டோபர் 8 ம் திகதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த 8 வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 50 நாட்களை கடந்து செல்கிறது.

இதுவரை சுவாரஸ்யம் குறைந்துகொண்டே இருந்து வந்தது. இந்த வாரம் நடைபெற்ற ‘நானும் பொம்மை நீயும் பொம்மை’ டாஸ்க் தான். இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அடிதடியில் இறங்கியதால் இந்த வாரம் எப்படியும் சூடு பிடிக்கும்.

இதில் சிறப்பாக பங்கெடுத்த போட்டியாளர்களாக ஜெஃப்ரி மற்றும் சாச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவர் தான் அடுத்த வாரம் தலைவர் போட்டியில் பங்கெடுக்க உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டபுள் எவிக்‌ஷனும் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது நிகழ்ச்சி 8-வது வாரத்தை எட்டியும் இன்னும் 18 பேர் வீட்டில் உள்ளனர்.

இதனால் இந்த வாரம் கட்டாயம் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் பட்டியலில் 10 பேர் இடம்பெற்று உள்ளனர். இவர்களில் ஜாக்குலின், அன்ஷிதா மற்றும் விஷால் ஆகியோர் அதிக வாக்குகளை பெற்று முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *