
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஒன்பது (09) மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகளை புதுப்பித்துள்ளது. இதன்படி NBRO) கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இந்தப் பகுதிகளில் பதிவாகியுள்ளதால், மண்சரிவு, பாறை சரிவு மற்றும் நிலம் சரிவு போன்ற அபாயங்களைத் தவிர்ப்பதற்காக மக்கள் அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.