நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகள் தொடர்பில் அறிக்கையிடுவதற்கும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இன்று (26) முதல் 24 மணிநேரமும் செயற்படும் வகையில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.அதன்படி, குறித்த விசேட பிரிவினை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அவசரகால சூழ்நிலைகள், இடப்பெயர்வுகள் மற்றும் உதவிகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.தொலைபேசி இலக்கங்கள்011-2027148011-2472757011 – 2430912011-2013051மின்னஞ்சல் முகவரிdisaster.ops@police.gov.lk