கொழும்பு-யாழ் வீதியின் போக்குவரத்து பாதிப்பு

ByEditor 2

Nov 27, 2024

யாழ்ப்பாணம்-கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் இன்று (27) காலை பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையில், அக்குரஸ்ஸ, இம்புல்கொடவில் படகில் ஏறி வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 16 வயது மாணவன் ஒருவரை 20 வயது இளைஞன் காப்பாற்றியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.களனி கங்கை நிரம்பி வழிவதால் க்ளென்கொஸ், கித்துல்கல, தெரணியகல மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நில்வலா ஆறு நிரம்பி வழிவதால் பாணடுகம பிரதேசத்திற்கும் மகாவலி ஆறு நிரம்பி வழிவதால் பேராதனை மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், மல்வத்து ஓயாவை அண்மித்த தந்திரமலை பிரதேசம், தெதுரு ஓயாவை அண்மித்த மொரகஸ்வெவ பிரதேசம் மற்றும் மஹா ஓயாவை அண்மித்த படல்கம பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *