கடவுச்சீட்டுக்காக காத்திருப்பவர்களிடம் மோசடிக் கும்பல்கள் அட்டகாசம்

Byadmin

Nov 3, 2024

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மோசடி கும்பல்களின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக உருவாகியுள்ள வரிசையில் முன்வரிசை பிடிப்பதற்கு குழுவொன்று 5000 ரூபாவை அறவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளாந்தம் சுமார் 2000 பேர் கடவுச்சீட்டினை பெற வரிசையில் காத்திருக்கின்றனர். அத்துடன் 1000 பேர் கடவுச்சீட்டிற்கான திகதி வழங்கப்படும் டோக்கனுக்காக நிற்கின்றனர்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் கும்பல் முன்வரிசைக்குள் நுழைவதற்கு 5000 ரூபா அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைக்கு அடிமையானவர்களை அதிகாலையில் இருந்து வரிசையில் நிறுத்தி வைப்பதாகவும், மதிய வேளையில் அந்த இடத்தை 5000 ரூபா பணத்தை பெற்று்கொண்டு தேவையானர்களுக்கு வழங்குவதாகவும் தெரிய வந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *