“ஆறு தங்க முட்டைகள்”

Byadmin

Oct 28, 2024

படிக்க தவறாதீர்கள் (மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்)

ஒரு இளம் பெண் தன் தாத்தாவிடம் கேட்டாள்.
“தாத்தா, என் வாழ்க்கையில் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் ஒன்றை எனக்கு கற்பிக்க முடியுமா?”

தாத்தா நீண்ட நேரம் யோசித்துவிட்டு,
“உனக்கு ஒரு சக்திவாய்ந்த வாழ்க்கைப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு முன், நீ அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும், மிகப்பெரிய விஷயம் ஒன்றைச் செய்ய வேண்டும்.”

சிறுமி மகிழ்ச்சியுடன் கேட்டாள்.
“என்ன சொல்லுங்க தாத்தா?”

தாத்தா சிறிது நேரம் யோசித்து சொன்னார்..
“நீ அக்கம்பக்கம் போய், என் நெருப்புக்கோழி ஆறு பொன் முட்டைகளை இட்டது” என்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும். அதைக் கேட்டு அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். பிறகு ஒவ்வொரு முட்டையும் பல லட்சம் மதிப்புடையது என்றும், அவற்றை விற்று நான் கோடீஸ்வரன் ஆவேன் என்றும் சொல். விரைவில் என் வாழ்க்கை மாறும், நான் சமுதாயத்தில் பணக்காரர்களில் ஒருவராக மாறுவேன்” என்று அனைவருக்கும் சொல்.

அதன் சாராம்சம் புரியாமல் அந்த இளம்பெண் செய்தாள். அவள் திரும்பி வந்த பிறகு, அவளும் அவளுடைய தாத்தாவும் இரவும் பகலும் காத்திருந்தார்கள், ஆனால் அவர்களது அண்டை வீட்டார் யாரும் அவரை வாழ்த்தவும் அவருடன் சேர்ந்து சந்தோசத்தை கொண்டாடவும் அவர்கள் வீட்டிற்கு வரவில்லை.

மறுநாள் காலையில், தாத்தா இளம்பெண்ணிடம் கூறினார்:
“இப்போது, நீங்கள் அக்கம்பக்கம் சென்று, நேற்றிரவு ஒரு திருடன் வந்து என் வீட்டை இடித்து, என் நெருப்புக்கு கோழியை கொன்று, தங்க முட்டைகளை எல்லாம் திருடிச் சென்றுவிட்டான்,” என்று எல்லோரிடமும் சொல். நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்று சொல்!”

சிறுமி வெளியே சென்று அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு, அதிர்ச்சியூட்டும் ஏராளமான மக்கள் அவர்களின் வீட்டில் குவிந்தனர். ஆச்சரியமடைந்த அந்த இளம்பெண் தன் தாத்தாவிடம் கேட்டாள்.
“ஏன் தாத்தா, இன்னைக்கு நிறைய பேர் வந்திருக்காங்க, நேற்று யாரும் வரவில்லையே?”

தாத்தா சிரித்துக்கொண்டே சொன்னார்.
“நம்மைப் பற்றிய நல்ல செய்தியைக் கேட்டால், மக்கள் அமைதியாக இருப்பார்கள், அதைப் புறக்கணித்து, எதுவும் நடக்காதது போல் நடந்து கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் நம்மைப் பற்றிய கெட்ட செய்தியைக் கேட்டால், அவர்கள் அதை காட்டுத்தீ போல் அடுத்தவர்களுக்கு பரப்பி, அது உண்மையா என்பதை தெரிந்துகொள்வதில் ஆர்வத்துடன் இருப்பார்கள். நம் வெற்றியைக் கொண்டாட மக்கள் விரும்ப மாட்டார்கள், ஆனால் நமது வீழ்ச்சியைக் காண ஆர்வமுடன் வருவார்கள்.”

அந்த நேரத்தில், தாத்தா இளம்பெண்ணின் தோள்களில் கையை வைத்து, மீண்டும் புன்னகைத்து, பின்னர் தொடர்ந்தார்,
“இப்போது நான் உனக்குக் கற்பிக்க வேண்டிய சக்திவாய்ந்த வாழ்க்கைப் பாடம் இதுதான்…

நம்மைச் சுற்றியுள்ளவர்களால் சொல்லப்படும் மிகப்பெரிய பொய் என்னவென்றால், நாம் வெற்றிபெறுவதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதே. உண்மை என்னவென்றால், பெரும்பாலான மக்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கூட நாம் வெற்றி பெறுவதைக் காண விரும்புவதில்லை. நாம் அவர்களை விட ஒரு படி முன்னேறுகிறோம் என்று யாராவது உணர்ந்தால், அதை கேட்டு பொறாமைப்படுவார்கள், பதட்டப்படுவார்கள்.

பெரும்பாலான மக்கள் தங்களை விட சிறப்பாக செயல்படுபவர்களை உண்மையில் விரும்புவதில்லை. அவர்கள் பொறாமைப்படுகிறார்கள், மேலும் உள்ளுக்குள், அந்த வாழ்க்கை நமக்கு கிடைப்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனாலும், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்வது அவசியம். அதற்க்கு பதில், உங்களின் சிறந்த பதிப்பாக இருப்பதில் கவனம் செலுத்துங்கள். அவர்களை மாற்ற முயற்சிப்பதை நிறுத்துங்கள், அவர்கள் உங்களைப்பற்றி என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள்.

உங்களுக்கான இலக்குகளை அமைக்கவும், உங்கள் கனவுகளைப் பின்பற்றவும், உங்கள் மனதை பயிற்சி செய்யுங்கள். உங்கள் கனவுகளை அடைவதை தடுக்க யாரையும், எதையும் அனுமதிக்க வேண்டாம்.

வாழ்த்துக்கள் நண்பர்களே..!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *