கடவுச்சீட்டு பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Byadmin

Oct 25, 2024

சாதாரண முறையில் கடவுச்சீட்டை பெறுவதற்கு இந்த நாட்களில் மிக நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தை சுற்றிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளவர்கள் மட்டுமே திணைக்களத்திற்கு வருமாறு மக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் போதுமான கடவுச்சீட்டுகள் உள்ளதாகவும், நவீனமயமாக்கப்பட்டு, வித்தியாசமான முறையில் மக்களுக்குக் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *