மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29) இரவு 11.30 மணி வரை மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழை மற்றும் அதிகளவில் மின்னல் ஏற்படுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.