விபத்தில் 22 வயதான இளைஞர் உயிரிழப்பு!

Byadmin

Sep 19, 2024

கிளிநொச்சியில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 22 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் குறித்த விந்து இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்திலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உயிரிநத இளைஞன் மீது வீதியால் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் மோதியதில குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் மற்றும் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் பன்னங்கண்டி பகுதியைச்சேர்ந்த அந்தோனி அல்பிரட் – அனுஷன் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *