ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை – 3 கேள்விகளை நீக்க தீர்மானம்

Byadmin

Sep 17, 2024

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் இருந்து மூன்று கேள்விகளை நீக்குவதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாள் போன்று மாதிரி வினாத்தாள் ஒன்று அலவ்வ பிரதேசத்தில் வட்ஸ்அப் குழுக்களில் பரவி வருவதாக எழுந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைக்கு பின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாம் மேற்கொண்ட விசாரணையில் அவர் தெரிவித்தார்.

இதன்படி, நாளை (18) வினாத்தாள் பரிசோதகர் குழுவொன்று குறித்த பகுதிக்கு செல்லவுள்ளதாகவும், முறையான விசாரணையின் பின்னர் சர்ச்சைக்குரிய 3 கேள்விகள் நீக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *