நாட்டில் இப்படியும் நடக்கிறது

Byadmin

Sep 9, 2024

மஸ்கெலியா மக்கள் வங்கி தன்னியக்க இயந்திரம் ஊடாக பணம் எடுக்க சென்ற பெண்ணின் வங்கி அட்டையை பயன்படுத்தி 16,000 ரூபாய் பணம் களவாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த கடந்த 3 ம் திகதி மஸ்கெலியா மக்கள் வங்கி கிளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மஸ்கெலியா மொக்கா தோட்ட மிட்லோதியன் பிரிவைச் சேர்ந்த நபரொருவர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் , நேற்றையதினம்(08) சந்தேகத்திற்கு இடமான முறையில் மஸ்கெலியா மக்கள் வங்கி கிளையில் தன்னியக்க இயந்திரம் பகுதியில் நடமாடிய யுவதி ஒருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான யுவதியை இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

அதேவேளை, வங்கிகளில் தன்னியக்க இயந்திரம் ஊடாக பணம் எடுக்க செல்லும் அனைவரும் தங்களது பணத்தை மீள பெற வங்கி அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய நபர்களிடம் தன்னியக்க இயந்திரம் ஊடாக பணம் பெற உதவியை நாடவேண்டாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுக் கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *