நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தேர்தல் முறைப்பாடுகள்

Byadmin

Sep 1, 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 153 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன.

நேற்று (31) இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வன்முறைகள் தொடர்பான இரண்டு முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 150 முறைப்பாடுகளும் மற்றுமொரு முறைப்பாடும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி முதல் நேற்று வரையான ஒரு மாத காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,745 ஆக அதிகரித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *