அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள பிரதேசம்

Byadmin

Aug 18, 2024

நாட்டை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக பல பிரதேசங்களில் இன்றும் மழை பெய்து வருகின்றது.

கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை பிரதேசத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் அங்கு 148.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, களுகங்கையின் கிளை ஆறான குடா கங்கை, மில்லகந்த பிரதேசத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நிலையாக காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

களு ங்கையின் மற்றுமொரு கிளை ஆறான மகுரு கங்கையின் நீர் மட்டம் மகுர பிரதேசத்தில் சிறு வெள்ளமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *